தொடக்கம் |
|
|
7.100 திருநொடித்தான்மலை பஞ்சமம் |
1 | தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து, வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்) ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ- ஊனை உயிர் வெருட்டீ ஒள்ளியானை நினைத்திருந்தேன், வானை மதித்த(அ)மரர் வலம்செய்து, எனை ஏற வைக்க ஆனை அருள் புரிந்தான், நொடித்தான்மலை உத்தமனே? |
|
உரை
|
|
|
|
|
3 | மந்திரம் ஒன்று அறியேன், மனைவாழ்க்கை மகிழ்ந்து, அடியேன்; சுந்தர வேடங்களால்-துரிசே செயும் தொண்டன் எனை அந்தர மால்விசும்பில்(ல்) அழகு ஆனை அருள்புரிந்த- தும் தரமோ? நெஞ்சமே!-நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
4 | வாழ்வை உகந்த நெஞ்சே! மடவார் தங்கள் வல்வினைப் பட்டு, ஆழ முகந்த என்னை அது மாற்றி, அமரர் எல்லாம் சூழ அருள் புரிந்து(த்), தொண்டனேன் பரம் அல்லது ஒரு வேழம் அருள் புரிந்தான்நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
5 | மண்ணுலகில் பிறந்து(ந்) நும்மை வாழ்த்தும் வழி அடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்; விண்ணுலகத்தவர்கள் விரும்ப(வ்) வெள்ளையானையின் மேல் என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
6 | அஞ்சினை ஒன்றி நின்று(வ்) அலர் கொண்டு அடி சேர்வு அறியா வஞ்சனை என் மனமே வைகி, வான நன் நாடர் முன்னே! துஞ்சுதல் மாற்றுவித்து, தொண்டனேன் பரம் அல்லது ஒரு வெஞ்சின ஆனை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
7 | நிலை கெட, விண் அதிர(ந்), நிலம் எங்கும் அதிர்ந்து அசைய, மலை இடை யானை ஏறி(வ்) வழியே வருவேன் எதிரே, அலைகடல் ஆல் அரையன்(ன்) அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச, உலை அணையாத வண்ணம்-நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
8 | அர ஒலி, ஆகமங்கள்(ள்) அறிவார் அறி தோத்திரங்கள், விரவிய வேத ஒலி, விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப, வரம் மலி வாணன் வந்து(வ்) வழிதந்து, எனக்கு ஏறுவது ஓர் சிரம் மலி யானை தந்தான்நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
9 | இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம் வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து, மந்திர மா முனிவர், “இவன் ஆர்?” என,-எம்பெருமான் “நம்தமர் ஊரன்” என்றான்நொடித்தான்மலை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
10 | ஊழிதொறு ஊழி முற்றும்(ம்) உயர் பொன் நொடித்தான்மலையை, சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன, ஏழ் இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும், ஆழி-கடல்(ல்) அரையா! அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே! |
|
உரை
|
|
|
|