தொடக்கம் |
திருப்புலம்பல்
|
|
|
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே, கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண் நீறு ஆடீ, ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன், நின் பூம் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே! |
|
உரை
|
|
|
|
|
சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ இலைச் சூலப் படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழ வெள்ளை விடையானே, விரி பொழில் சூழ் பெருந்துறையாய், அடியேன் நான், உடையானே, உனை அல்லாது, உறு துணை மற்று அறியேனே! |
|
உரை
|
|
|
|
|
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்; கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே, கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே! |
|
உரை
|
|
|
|