திருப்படை எழுச்சி
 
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்;
மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்;
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்;
வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே.
உரை
   
தொண்டர்காள், தூசி செல்லீர்; பத்தர்காள், சூழப் போகீர்;
ஒண் திறல் யோகிகளே, பேர் அணி உந்தீர்கள்;
திண் திறல் சித்தர்களே, கடைக் கூழை செல்மின்கள்;
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே.
உரை