தொடக்கம் |
பண்டு ஆய நான்மறை
|
|
|
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும், கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! உண்டாமோ கைம்மாறு? உரை. |
|
உரை
|
|
|
|
|
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன் வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த, கருவும் கெடும், பிறவிக் காடு. |
|
உரை
|
|
|
|
|
காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்; நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி, அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம், மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து. |
|
உரை
|
|
|
|
|
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும், தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர் சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர். |
|
உரை
|
|
|
|
|
நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல, எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின் மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக் கழியாது இருந்தவனை, காண். |
|
உரை
|
|
|
|
|
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என, பேணும் அடியார் பிறப்பு அகல, காணும் பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும் பிரியானை, வாய் ஆரப் பேசு. |
|
உரை
|
|
|
|
|
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி, பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து. |
|
உரை
|
|
|
|