பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

110. 
  

அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
   அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்;
   செய்வதென் ! தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங்
   கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனே அறியும்என் மனமே.               (10)
 

110.   அந்தியில் பிறை-மாலைக் காலத்தில் தோன்றுகின்ற சந்திரன்.
சிந்தையை    விட்டு    அவனிடத்தே    அடங்குதலால்,    சிந்தை
காணப்படாதாயிற்று.  ‘ஏனைய  கருவிகளையேயன்றி,  எனப் பொருள்
தருதலின்,  ‘‘சிந்தையும்’’ என்னும் உம்மை, இறந்தது தழுவிய  எச்சம்.
அலங்கல்-அசைவின்கண்.     கெந்தியா    (கந்தியா)-மணம்    வீசி,
புண்டரிகம்-.தாமரை  மலர்.‘‘கெந்தியா உகளும் கெண்டை புண்டரிகம்
கிழிக்கும்’’  என்றாராயினும்‘புண்டரிகம் கிழிக்கும் கெண்டை கெந்தியா
உகளும்’   என்பது   கருத்தென்க.   கெந்தித்தல்.   புண்டரிகத்தைக்
கிழித்தலால் உண்டாயிற்று. வந்த நாள்-சென்று நான் அவனைக் கண்ட
நாளில்  (வேபட்ட  என்  மனநிலையை  அவன் ஒருவனே அறிவான்
என்க.)  


மேல்