பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை

116.அக்கனா அனைய செல்வமே சிந்தித்
   தைவரோ டென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக்
   கென்னையாள் ஆண்ட நாயகனே !

முக்கணா யகனே! முழுதுல கிறைஞ்ச
   முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
பக்கலா னந்தம் இடையறா வண்ணம்
   பண்ணினாய் பவளவாய் மொழிந்தே             (5)
 

116.    இதன்     முதலடி,     சேந்தனாரது   திருவீழிமிழலைத்
திருவிசைப்பாவிலும்    வந்தமை   காண்க.   ‘ஐவரோடும்’    என்ற
எண்ணும்மை   விரிக்க. ‘என்னிடை விளைந்த’ எனப் பாடம்   ஓதுதல்
சிறக்கும்.  கலாம்-பூசல்; இதளை இக்காலத்தார், ‘கலகம்’ என்பர்.  ஆள்
ஆண்ட-ஆளாக  ஆண்ட.  பக்கல், ஏழன் உருபு, ‘வாயால் மொழிந்து’
என உருபு விரிக்க. மொழிந்து-மெய்ப் பொருளைக் கூறி ;  உபதேசித்து,
இறைவன்  ஆசிரியனாய்  வந்து  அருள்செய்த குறிப்பு இதனுள்ளும்
காணப்படுதல் காண்க. 


மேல்