பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை

120.


 

அம்பரா ! அனலா ! அனிலமே ! புவிநீ
   அம்புவே ! இந்துவே ! இரவி
அம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
   ஒழிவற நிறைந்தஒண் சுடரே !

மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்
   முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே
எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
   எந்தையும் தாயும்ஆ யினையே.                (9)
 

120,     அம்பரன்-ஆகாயமாய் இருப்பவன். அனலன்-நெருப்பாய்
இருப்பவன். அனிலம் முதலியன இங்ஙனம் அன்பெற்று வாராமையின்,
அவை  ஆகுபெயர்களாம்.  அனிலம்-காற்று  ஏனையபோல; ‘புவியே’
என்பதே     பாடமாதல்    வேண்டும்.    புவி-நிலம்.    அம்பு-நீர்.
இந்து-சந்திரன்.  ‘இரவீ’  என்பதே பாடம்போலும். இறைவனது அட்ட
மூர்த்தங்களுள் இயமானன் ஒழித்து ஒழிந்த உருவங்களை எடுத்தோதி
விளித்தார்.  ‘‘அணுவாய்’’ என்றது, ‘நுண்ணிய பொருளாய்’ என்றவாறு.
மொய்ம்பு -  வலிமை  ;    இங்கு,   மன  உறுதியை  யுணர்த்திற்று.  
நலம்     சொல் -   உறுதியை    உரைக்கின்ற.      ‘‘மூதறிவாளர்
முகத்தலை’’    என்றதில் தொக்குநின்ற ஆறாவது, ’யானையது  காடு’
என்பதுபோல.  வாழ்ச்சிக் கிழமைக்கண் வந்தது. ‘‘எம்பிரான்’’ என்றது,
‘இறைவன்’  என்னும்  அளவாய் நின்றது. ‘‘மீண்டு’’ என்றது, ‘மற்றும்’
என்னும் பொருள் பட வந்தது.  


மேல்