133. தேட-தேடுமாறு, அங்ஙனே-அவ்விடத்தே ; என்றது, ‘மாலும் அயனும் பொருதவிடத்தே’ என்றதாம். ‘‘பெரிய’’ என்றது, ‘பெரியோனாய் நின்ற’ என ஆக்கவினைக் குறிப்புப் பெயர். ஆள் விரும்பி-ஆளாக விரும்பி. ‘‘மறக்கேன்’’ என்றதில் எதிர்காலங் காட்டும் ககர வொற்று வந்ததன்று ; குகரச் சாரியை வந்தது. எனவே, ‘மறவேன்’ என்பது பொருளாயிற்று. இவ்வாறு வருதல் பிற்கால வழக்கு. இருவன் இரு பொருளாய் இருப்பவன். இரு பொருள்-சத்தி, சிவம் ; பெண்மை, ஆண்மை, கன்னல்-கரும்பு. |