பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்

167.

அருளுமா றருளி ஆளுமா றாள
   அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
   குயிலினை மயல்செய்வ தழகோ !
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
   தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே                   (6)
 

167.     அடிகள்-  (யாவர்க்கும்) தலைவர்.  ‘அடிகளாகியதம்’ என
உரைக்க.   குருள்-சுருள்;   சடைமுடி.   ‘‘அழகோ’’  ஓகாரம்  சிறப்பு;
எதிர்மறையாயின்,  ‘ஆளா  அடிகள்’   என்பது பாடமாதல் வேண்டும்.
தரள  வான்குன்றில்-முத்தினாலாகிய   பெரிய  மலைபோல. ‘‘ஒளியும்’’
என்ற  உம்மை  சிறப்பு. குவால். (மாடங்களின்) திரட்சி.  ‘மாடங்களின்’
என்பது  ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது.  இருளெலாம்-இருள் முழுதும்,
‘கிழியும் தஞ்சை’ என இயைக்க.  


மேல்