பாட்டு முதற்குறிப்பு அகராதி

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்

190.

அகலோக மெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்தபுண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச்சிற் றம்பலமே.         (6)
 

190.     ‘‘நீ’’   என்பதொழிய,   ‘‘புகலோகம்’’   என்பது   முதல்,
’’புண்ணியங்கள்’’  என்பது  காறும்    உள்ள  அனைத்தையும் முதலிற்
கூட்டுக.  புக  -  புகுவதற்கு.  லோகம் உண்டு என்று - வேறு உலகம்
உண்டு என்று நினைத்து. ‘‘புவலோகம்’’ என்றது,  ‘மேலுலகம்’ என்னும்
அளவாய்    நின்றது.    புவலோக   நெறி    படைத்த-மேலுலகத்தை
அடைவிக்கும்  நெறியானே  எய்திய.  ‘புண்ணியங்களால்’   என உருபு
விரித்து.  அதனை,  ‘‘சூழ’’  என்பதனோடு  முடிக்க.  புண்ணியங்களை
எய்தினோர்  அடியவர்கள். அகலோகம்-இவ்வுலகம்   இத்திருப்பாட்டில்
உயிரெதுகை வந்தது.


மேல்