7. திருவாலியமுதனார் திருவிசைப்பா25. கோயில்
250.
அரிவையோர் கூறுகந்தான் அழ கன்எழில் மால்கரியின் உரிவைநல் லுத்தரியம் உகந் தான்உம்ப ரார்தம்பிரான் புரிபவர்க் கின்னருள்செய் புலி யூர்த்திருச் சிற்றம்பலத் தெரிமகிழ்ந் தாடுகின்ற எம் பிரான்என் இறையவனே. (4)
250. மால் கரி- பெரிய யானை. உத்தரியம்-மேலாடை.புரிபவர்-விரும்புபவர். ‘இன்னருள்செய் எம்பிரான்’ என இயையும்.இறைவன்-தலைவன். ‘‘இறையவனே’’ என்னும் ஏகாரத்தைப் பிரித்து,‘‘எம்பிரான்’’ என்றதனோடு கூட்டுக.