261. ’’சடையினானை’’என்றது, ‘சடையை உடையவனாகிய நின்னை’ என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழுவமைதி. சிலை-வில். வார்த்தை- (வீரச்) செய்தி. ‘‘பேசவும்’’ என்ற உம்மை, ‘பேசுதல் ஒன்றையே பிறர் செய்யவும், எனப்பொருள் தந்து நின்றது, நையும் -(அதனைக் கேட்ட அளவிலே) நெகிழ்ந்துருகும்.கருந் தடமலர் - கரிய நீர்ப் பூ; நீலோற் பலம். கண்ட - கண்டத்தை உடையவனே. வண் தார்-வளப்பமான மாலையை அணிந்த. ‘தார்’ என்பது இங்குப் பொதுமையில் நின்றது காரிகையார்-பெண்கள். ‘அவர்கள் முன்பு’ என்றது, ‘அவர்கள் நகைக்கும்படி’ என்றதாம். பெண்மை - பெண் தன்மை; நாணம், நசை - விருப்பம். ‘நசையினாலே தோற்றேன்’ என முன்னர்க் கூட்டுக. |