267,‘‘ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே’’ என்பதன் பின், ‘ஆதலின்’ என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. ‘ஆசையை அளவறுத்தல் இயலாதாகலின் மடவார் பலரும் கலந்தெழுவாராயினர்’ என்றவாறு. ‘நடம் ஆடுவானைக் கலந்து எழும்’ என இயையும். கலந்து - மனத்தாற் கூடி. இனி, ‘‘கலந்து’’ என்றதனை ‘கலக்க’ எனத் திரித்தலும் ஆம். வைகலும் - நாள்தோறும். மாலைப் பூசல் - மாலையைப்பெற, ‘நான் நான்’ என்று செய்யும் பூசல். ‘பூசலை உரைத்த வாசகம்’ என்க. ‘‘கண்டு’’ என்றது, ‘படைத்து’ என்றவாறு. வாசக மலர்கள்-சொற்களாகிய பூக்கள். |