7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
238. | இளமென் முலையார் எழில்மைந் தரொடும் ஏரார் அமளிமேல் திளையும் மாடத் திருவார் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் வளர்பொன் மலையுள் வயிர மலைபோல் வலக்கை கவித்துநின் றளவில் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே. (3) |
238. ‘திளைக்கும்’ என்பது, ‘திளையும்’ எனச் சாரியை தொகுக்கப்பட்டு நின்றது. திளைத்தல்-இன்பத்தில் மூழ்கல். பொன்மலை சிற்றம்பலத்தின் வடிவிற்கும், வயிர மலை இறைவ | னுக்கும் உவமை. திருநீற்றுப் பூச்சினால் இறைவன் திருமேனி வயிரமலைபோல் காணப்படுவதாயிற்று. ‘கவித்தல்’ என்றது, அபயமாகக் காட்டுதலை. |
|