188. ‘எம் வினைநோய்’ என இயையும், ‘பந்த வினை வல்வினை’ எனத் தனித்தனி இயைக்க. பந்தம்-கட்டு. திருப்பதிகங்களை வினைதீர்தற்கு வழியாகத் திருக்கடைக்காப்பு அருளிச்செய்து சென்றமையின், ‘‘எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்ட எமை ஆளும் சம்பந்தன்’’ என்றார். அம்பு உந்து-அம்புபோலப் பாய்கின்ற. ‘‘தானும்’’ எனப் படர்க்கையாகக் கூறினார். ‘‘தான்’’ என்றது, கூத்தப்பெருமானை. இடரின்றி உணர்த்தும் என்க. ‘கண்ணாளும் தானும் சேர்ந்து இருக்கை தில்லை அம்பலமே ஆயிற்று’ என மாறிக் கூட்டுக. ‘செம்பொன்னால்’ என உருபு விரிக்க. இருக்கை-இருக்கும் இடம். |