பாட்டு முதற்குறிப்பு அகராதி

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்

275.

என்னை வலிவார்ஆர் என்ற இலங்கையர்கோன்
மன்னு முடிகள் நெரித்த மணவாளர்
செந்நெல் விளைகழனித் தில்லைச்சிற்றம்பலவர்
முன்னந்தான் கண்டறிவார் ஒவ்வார்இம் முத்தரே.     (8)
 


275. வலிவார்-வலிசெய்வார்; நலிகின்றவர். ‘‘வந்து மூழ்கியும் தாரான்
வலிசெய்கின்றான்’’    (பெ.பு.திருநீலகண்ட-32.)    என்றது   காண்க.
மணவாளர்-அழகர்.  ‘‘மணவாளர்’’  என்றாள், உமையது  அச்சத்தைத்
தவிர்த்தமை கருதி. அதனால், இவளது காதல் மீக்கூர்தல்  பெறப்படும்.
‘மணவாளர்  இச்சிற்றம்பலவர்’’  எனச்  சுட்டும்.  ‘ஆயினும்’ என்னும்
சொல்லெச்சமும்  வருவிக்க.  தான், அசைநிலை. கண்டறிவார்-சிலரால்
கண்டறியப்பட்டவர்; என்றது, ‘சிலர் தலைப்பட்டுணர்ந்து, ‘‘அற்றவர்க்கு
அற்ற  சிவன்’’  (திருமுறை-3.120.2.)  என்றாற்போலக்  கூறப்பட்டவர்’
என்றபடி. அவ்வியல்பு தன்னளவில் இவர்மாட்டுக் காணப்படாமையின்,
‘‘முன்னம்’’  கண்டறிவார் ஒவ்வார்’’ என்றாள்.  ‘‘அறிவார்’’  என்றது
காலமயக்கு.


மேல்