36. ஈண்டு சோதி-மிக்க ஒளி; இஃது ‘‘இலங்கு’’ என்பதனோடு முடியும். அலங்கல்-மாலை; என்றது பொன்னரி மாலையை; இதனையுடையது தில்லை. தூர்த்த வார்த்தை - வஞ்சகச் சொல். தொழும்பர் - பிறர்க்கு அடிமையாய் நிற்பவர். பிழம்பு - இனிது விளங்காத சொல்; முணுமுணுத்தல். பிட்டர் - நொய்யர்; சிறியோர். இச்சொல் ‘பிட்டம்’ என்பதினின்று; பிறந்தது. ‘‘பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா பேணித் தொழுமின்கள்’’ (திருமுறை - 1-69-10) என்று அருளிச்செய்தமை காண்க. |