111. கித்தி-விளையாட்டு.‘அரிவையர் கம்பலை செய்’ என இயையும். மத்தன்-உன்மத்தன் ; ‘ஊமத்த மலரைச் சூடியவன் எனலுமாம். பெரியவர்க்கு-பக்குவம் மிக்கோர்க்கு. ‘‘அகல் இரு விசும்பு’’ என்றது சிவலோகத்தை, ‘விசும்பின் கண்ணதாகிய முத்தி’ என்க. முத்தி தருவதனை, ‘‘முத்தி’’ என்றார். ‘திருவும்’ என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று திரு-திருமகள். அவள், துறக்கம் முதலிய செல்வத்தைத் தருபவள். எனவே, ‘இம்மை மறுமைப் பயன்களையும் பெறுவர்’ என்றதாம். |