பாட்டு முதற்குறிப்பு அகராதி

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை

64.

கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்
   கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்
   என்சொல்லிச் சொல்லும்இத் தூமொழி
கற்போல் மனங்கனி வித்தஎம்
   கருணால யாவந்திடாய் என்றாற்
பெற்போ பெருந்திரு வாவடு
   துறையாளி பேசா தொழிவதே.                  (7)
 

64.   கிற்போம் - (வேள்வியை யாம் முடிக்க ) வல்லோம். எடுத்து-
அதனைத் தொடங்கி. ஓடிக்கெட்ட - (பின்பு அது மாட்டாமல்) தோற்று
ஓடி  அழிந்த.  சொல்-அத்தேவர்களது  புகழ்.  பயன் தருவது.  பயன்
எனப்பட்டது.  முன்னர்ப்  போந்த  சொற்குறிப்பால், ‘அவர்  புகழ்கள்
பயன்தருவனவாகா’   என்பது  பெறப்பட்டது.  ‘‘பாவிகாள்’’  என்றது,
அவர்  புகழ்களைப்  பயன்  தருவனவாகக்   கருதிச் சொல்லுவோரை.
எனச் சொல்லிச் சொல்லும்’’ என்றது,   ‘என்று  பலகாற்  சொல்கின்ற’

என்னும்     பொருட்டாய்  நின்றது. ‘இத் தூமொழியாளது கற்போலும்
மனத்தை’  என்க. என்றால் - என்று அவள் அழைத்தால். “பெற்போ”
என்றதை  இறுதியிற்  கூட்டுக. பெற்பு -  பெற்றி; தன்மை. பெற்போ -
உனக்கு ஏற்ற தன்மையோ.  


மேல்