64. கிற்போம் - (வேள்வியை யாம் முடிக்க ) வல்லோம். எடுத்து- அதனைத் தொடங்கி. ஓடிக்கெட்ட - (பின்பு அது மாட்டாமல்) தோற்று ஓடி அழிந்த. சொல்-அத்தேவர்களது புகழ். பயன் தருவது. பயன் எனப்பட்டது. முன்னர்ப் போந்த சொற்குறிப்பால், ‘அவர் புகழ்கள் பயன்தருவனவாகா’ என்பது பெறப்பட்டது. ‘‘பாவிகாள்’’ என்றது, அவர் புகழ்களைப் பயன் தருவனவாகக் கருதிச் சொல்லுவோரை. எனச் சொல்லிச் சொல்லும்’’ என்றது, ‘என்று பலகாற் சொல்கின்ற’ |