வருவித்து, ‘இருசெவிக்கண்ணும்’ என ஈற்றில் தொக்கு நின்ற உருபும், உம்மையும் விரித்து, ‘ஒரு குழையே இருசெவிக் கண்ணும் உள்ளது’ எனப் பொருள் உரைத்து, ‘இருசெவிகளுள் ஒன்றிலே குழையுள்ளது’ என்பது அதனாற்போந்த பொருளாக உரைக்க. குழை உள்ளது வலச்செவியில்; இடச்செவியில் தோடு உளது. ’விமலம்-தூய்மை, பொறி-புள்ளி. வரி-கீற்று. திருவடிநிலை-பாதுகை; பின்னரும் பாதுகை கூறுவர். நீர்-நீர்மை |