19. ‘‘பிணி கெட’’ என்பதை முதலிற் கொள்க. அன்றி, இதனை நின்றாங்கு நிறுத்தி, ‘‘இவை’’ என்பதனை, ‘‘அபயம் என்பதன்பின் கூட்டினும் ஆம். கணி - எண்ணத்தக்க. விசிறுகரம்-வீசிய கை. துடி-உடுக்கை. விடவாய். ‘விடத்தையுடைய வாயை உடையது’ எனப் பாம்பிற்குக் காரணப்பெயர். திணி-செறிந்த, ‘‘மணி’’ என்றது, இங்கு அதன் நிறத்தை; எனவே, இங்கு, ‘மணி நீலம்’ என்றே இயைக்க. ‘திணிநீலம், மணிநீலம்’ எனத் தனித்தனி சென்று இயையும், ‘தெள்ளமுதே’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். |