பாட்டு முதற்குறிப்பு அகராதி

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

24. கோயில்

242.

சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
   தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
   என்றென் றவர்ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
   முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழ நட்டம்
   குழகன் ஆடுமே.                            (7)
 


242. ‘‘அவர்’’  என்பதனை,  ‘‘முனிவர்’’ என்றதன்பின்னும், ‘‘அணி
அம்பலவா’’  என்பதை, ‘‘அத்தா’’  என்றதன்பின்னும் கூட்டுக. ‘‘நிரந்த
தலம்’  என்பது  முன்னும்   வந்தது  (2), ‘முளை மதி’ என இயைத்து.
‘புதுவதாய்த்     தோன்றும்    சந்திரன்’   என   உரைக்க.  கொத்து
ஆர் - கொத்தாகப்  பொருந்திய. கொத்து, பூங்கொத்துமாம். குழகன் -
அழகன்.


மேல்