| 
 279.     அயல்   சார்வது-பக்கத்தில்   அணுகி   நிற்றல்.   இதுநாள்தோறுமாம்.    வேலை    ஆர்-கடலில்   நிறைந்து       தோன்றிய.
 உகந்தீர்-அதனையே    அமுதமாகக்    கொண்டீர்.    என்று-என்று
 இடையறாது   கூறி.   மால்   ஆகும்-பித்துடையவள்   ஆகின்றாள்.
 ‘அவளுக்கு   அருளல்   வேண்டும்’  என்பது  குறிப்பெச்சம்.  அது,
 பகுதிப்பொருள்  விகுதி.  வாள்  நுதல்-ஒளியையுடைய நெற்றி; இஃது,
 ஆகுபெயராய். ‘ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்மகள்’ எனப்
 பொருள்தந்தது.   ‘‘அயற்   சார்வதினால்  மாலதாகும்’’  என்றதனால்,
 இறைவரது வசிகரம் விளங்கும். ‘‘விடம் உண்டு உகந்தீர்’’ என்றதனால்,
 ‘அதனினும் நான் கொடியளோ’ என்பது குறித்தாள்.
 |