| 1. திருவிசைப்பா
 3. கோயில்
 | 30. | ‘சேவேந்து வெல்கொடி யானே ! ’என்னும்; ‘சிவனே! என் சேமத் துணையே !’ என்னும்:
 ‘மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
 வளர்நாய கா ! இங்கே வாராய் ’ என்னும்;
 பூவேந்தி மூவா யிரவர் தொழப்
 புகழேந்து மன்று பொலிய நின்ற
 கோவே! என் னும், ‘குணக் குன்றே!’ என்னும்;
 குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.            (8)
 
 |  | 
 30.  சே ஏந்து - எருதைக்கொண்ட.  சேமத் துணை -பாதுகாவலானதுணை. மா ஏந்து-விலங்குகளை யுடைய.
 | 
 |