பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

14. திருப்பூவணம்

150. 
  

சொன்னவில் முறைநான் காரணம் உணராச்
   சூழல்புக் கொளித்தநீ யின்று
கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக்
   கருணையிற் பெரியதொன் றுளதே ?
மின்னவில் கனக மாளிகை வாய்தல்
   விளங்கிளம் பிறைதவழ் மாடம்
பொன்னவில் புரிசை ஆவண வீதிப்
   பூவணம் கோயில்கொண் டாயே.             (7,8,9)
 

150.     ‘சொல் முறை நவில்’ என மாற்றி, சொற்களை,  ஒலிக்கும்
முறைப்படி  சொல்கின்ற’  என  உரைக்க. உணராச்சூழல்-எட்டலாகாத
இடம்.   ‘‘கல்  நவில்’’  என்றதில்  நவில்.  உவம  உருபு.  கண்ணில்
அகப்பட்டமை    பற்றி,    அதனை     வலையாக   உருவகித்தார்.
பெரியது-பெரியதொரு   கருணை.   உளதே-உண்டோ.  ஆரணத்துள்
அகப்படாமை   அவை  சொல்வடிவாதலாலும்,   கண்வலைப்பட்டமை
அதனைச்  செலுத்துகின்ற  உணர்வின்  தூய்மையாலும்   என்க. மின்
நவில்-ஒளிமிகுந்த.   வாய்தல்-வாயில்   மாடம்,   கோபுரம்.   பொன்
நவில்-பொன்   மிகுந்த.   புரிசை-மதில்.  ‘வாய்தல்’  மாடம்,  புரிசை
இவைகளையுடைய வீதி’ என்க.  


மேல்