149. கிழவோர்-உரியவர் ; அடியார். ‘கிழவோர அலச’ என இயையும். ‘‘அன்பு’’ என்றது இறைவனது அருளை. பார்த்திருந்து - தோன்றுதலை எதிர்நோக்கியிருந்து. அலச-வருந்த, ‘அவர்களிடம் செல்லாமல் என்பால் வந்து என் மனத்தில் நீ குடிகொண்ட இந்நிலைக்கு நான் என்ன தகுதியுடையேன் ! எனது தொண்டுதான் என்ன தகுதியுடையது’ என்றபடி. அம் மனம்-அழகிய மனம் ; அடியவர் மனம். குளிர்நாள்- மகிழ்வதற்கு அமைந்த நாளில். சிவபெருமானது விழாக்களில் அவன் பலிக்கு (பிச்சைக்கு) எழுந்தருளும் விழாவும் ஒன்றாதல் அறிக. அரிவையரது குழல் அவிழ்தல். இறைவனைக் காதலித்தமையாலாம். குழல் சுரும்பு-கூந்தலில் உள்ள வண்டுகள் ‘‘பொம்மென’’ என்றது. ஒலிக் குறிப்பு. |