239. தழைப் பீலி-தழைபோன்ற மயில் தோகை. சாதி ஒருவகை மரம்; இதன் காய் சிறந்ததொன்றாகக் கொள்ளப்படுதல் அறிக. கொண்டு-அகப்படக் கொண்டு, உந்தி இழியும்-தள்ளி ஓடுகின்ற. நிவா, ஓர் யாறு. ‘கரைமேல் விளங்கும் தில்லை’ என உரைக்க. ‘தில்லையாகிய தெய்வப்பதி’ என்றவாறு. ‘‘சிந்திப்பரிய’’ என்றது. ‘சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய ’ என்றபடி. |