264, ‘தாயினும் மிக நல்லையாகிய நீ இவளது தனிமைத் துயரை நினைகின்றாய் இல்லை’ என்றபடி. ‘‘பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’’ என்னும் திருவாசகத்தை நோக்குக பிடித்த-9). ‘‘சங்கரா’’ என்றதும், நீ சுகத்தைச் செய்பவன் அல்லையோ என்னும் குறிப்புடையது ‘உன்உடை’ என இயையும். ‘பாய் புலி, இரும் புலி’ என்க; இரு-பெரிய. அதள்-தோல். ‘‘அதளின்’’ என்பதில் இன். அல்வழிக்கண் வந்த சாரியை. ‘‘அதளின்னுடை’’ என்றதில் னகர ஒற்று விரித்தல். ‘இவள் சங்கம் இழந்தது, உனது உடையையும், பாதத்தையும் கண்டே‘ என்க. ஆவா, இரக்கக் குறிப்பு. ஓகாரமும் அன்னது. இத்திருப்பாட்டு ஒன்றும் செவிலி கூற்று. ஏனைய தலைவி கூற்று, |