39. திசைக்கு மிக்கு-திசையினும் பெரிதாகி. உகந்து -விரும்பிக் கண்டு. தீய நசிக்க-தீவினைகள் கெட்டொழியுமாறு. ‘‘வெண்ணீறது’’ என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. ஆடும்- மூழ்குகின்ற.‘ஆடி’ எனவும் பாடம் ஓதுவர். நமர்கள்- நம்மவர்: சிவனடியார்கள். ‘நாய்களாகிய, என்க. அசிக்க-பிறர் நகைக்கும்படி. நகைத்தல், ஆரிய மொழியின் ஒலிகள் பற்றியாம். ‘அவரது ஆரிய ஓத்துப் பொருளற்றது’ என்றபடி. ஆதர்-அறிவிலிகள். பேத வாதம்- உயர்ந்தவரோடு மாறுபட்டுப் பேசும் பேச்சு. பிசுக்கர்- வலிமையற்றவர்; உயிர்க்கு உறுதியாவதே வலிமை என்க. வலிமை கெட்டு மெலிதலை ‘பிசுத்தல், பிசுபிசுத்தல்’ என்ப. இதனுட் குறிக்கப்பட்டவர்கள் மீமாஞ்சகர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள் முதலியோர். |