3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
102.
| துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. (2) |
102. மொழுப்பு - முடி. ‘சூழியம்’ என்பது குறுகி. ‘‘சுழியம்’’ என வந்தது. சூழியம் - உச்சிக் கொண்டை, இஃது, | இங்குச் சடைமுடியைச் சுற்றியுள்ள பாம்பைக் குறித்தது. ‘பவள இதழ்’ என இயையும். ‘கண்ணையுடைய நெற்றியிலே உள்ள திலகம்’ என்க. ‘காட்டிக் கலந்தான்’ என முடியும். ‘கெண்டை, கயல்’-மீன் வகைகள். உகளும்-துள்ளுகின்ற. |
|