1. திருவிசைப்பா
4. கோயில்
38. | துணுக்கென அயனும் மாலும் தொடர்வருஞ் சுடராய், இப்பால் அணுக்கருக் கணிய செம்பொன் அம்பலத் தாடிக் கல்லாச் சிணுக்கரைச், செத்தற் கொத்தைச் சிதம்பரைச், சீத்தை ஊத்தைப் பிணுக்கரைக் காணா கண்; வாய் பேசாதப் பேய்க ளோடே. (4) |
38. ‘‘துணுக்கென’ என்பதை ‘துணுக்கென்று’ எனத் திரிக்க. துணிக்கெனல்-அஞ்சுதல். அணுக்கர்-அணுகியிருப்பவர்: அடியவர். அணிய-அண்மைக்கண் உள்ள. ‘‘செம்பொன் அம்பலத்தாடி’’ என்றது ஒருபெயர்த் தன்மைத்தாய், ‘‘அணிய’’ என்றதற்கு முடிபாயிற்று. சிணுக்கர் - அழுகையுடையவர். சிவபெருமானை இகழ்ந்து முணுமுணுத்தலை, ‘அழுகை’ என்றார். செத்தல்-செதுக்குதல்; பிறரைத் | துன்புறுத்துதல்’ என்க. கொத்தை - குருட்டுத்தன்மை. சிதம்பர்-வெள்ளைகள்; அறிவிலிகள். சீத்தை - கீழ்மை. ஊத்தை-வாய் அழுக்கு; இஃது, இழிந்த சொல் உடைமை பற்றிக் கூறப்பட்டது. ‘பிணக்கர்’ என்பது, எதுகை நோக்கி ‘‘பிணுக்கர்’’ என்றாயிற்று. |
|