பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்

83.

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
   தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
   நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த
   அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (4)
 

83.  துந்துபி முதலியன வாத்தியங்கள். அவை அவற்றது  ஒலியைக்
குறித்தன.   வான்   இயம்ப-வானளவும்  சென்று  ஒலிக்க.   முழவம்-
மத்தளம்.  அந்தியின்  மறை - அந்திக் காலத்திற்   சொல்லப்படுகின்ற
மந்திரங்களையுடைய    (நான்கு    வேதங்கள்      என்க).   மறைப்
பொருள்-இரகசியப்  பொருள்கள்.  ‘மறைப்  பொருள்  அரும்பும்’ என
இயையும்.


மேல்