107. தழை-வில்வம், வன்னி முதலியவற்றின் இலை. மொழுப்பு-முடி. சங்கம்-சங்க வளையல் ; இஃது அம்மைபாகத்தில் உள்ளது. ‘‘சகடை’’ என்றது, உடுக்கையை, தெண்டு-திரட்சி, குண்டை-எருது, ‘தழைதவழ் மொழுப்பு முதலாகக் குண்டையீறாக உள்ளனவே அவரது வாழ்வு போன்றன’ என்க. குழாங்கொடு தோன்றும் ‘கனகம்’ என்க. ‘மிக்க பொன்’ என்றவாறு. கிழை-ஒளி. ‘கனகத்தைச் சொரியும் நீரையுடைய பழனங்கள் கம்பலை செய்கின்ற கீழ்க்கோட்டூர்’ என்க. மழை-மேகம், ‘‘போன்றன’’ என்றதில் போறல்’ ஆக்கப் பொருட்டாய் நின்றது. ‘அவரை என்மனம் காதலிக்கின்றது வியப்பாகின்றது’ என்பது குறிப்பெச்சம். |