புறக்கணிப்பாகக் கையாளார்’ என்பதாம், முதுசொல்-பழமொழி, ‘இறைவன் தம்மைப் புறக்கணித்துவிட்டான்’ என்னும் கருத்தினால் ’ அம்முதுசொல் எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவிலே அறிந்தொழிந்தேன்’ என்றார். ‘‘சொல்லும்’’ என்னும் உம்மை, சிறப்பு. ‘‘அறிந்தொழிந்தேன்’’ என்பது ஒருசொல் நீர்மைத்து, வம்பு ஆனார் பணி உகத்தி-புதியராய் வந்து அடியராயினாரது தொண்டினையும் விரும்புகின்ற நீ ‘பணியும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி அடியேன் தொழில் இறையும் நம்பாய்- வழியடியேனாகிய எனது தொண்டினைச் சிறிதும் விரும்பவில்லை. |