32. ‘திருநீறு இடா உருத் தீண்டேன்’ என்றல், தில்லைக் கூத்தப்பெருமானுக்கு ஆகாதது. தனக்கும் ஆகாமை பற்றியாம். ‘மெய்யிலும் திருமுண்டத்திலும் தீட்டி’ என்க. முண்டம் -நெற்றி. பூசுதல் வாளா பூசுதலும், தீட்டுதல் குழைத்து இடுதலும் ஆகும். மெய்த்திரு முண்டத் திட்டு’ எனவும் பாடம் ஓதுப. திறம் -புகழ். பிதற்றுதல்-பித்துக்கொண்டு பேசுதல். இங்கும் மகேந்திரமலை, ‘பொன்மலை’ எனப்பட்டது. ‘‘அருளும்’’ என்றது, ஆகமங்களை அருளிச்செய்தமையை. எனவே, இவளும் அதுநோக்கியே காதல்மிக்காளாயினமை பெறப்பட்டது. |