2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
55. | தக்கன். வெங் கதிரோன், சலந்தரன், பிரமன், சந்திரன், இந்திரன், எச்சன், மிக்கநெஞ் சரக்கன் புரம்கரி, கருடன், மறலிவேள் இவர்மிகை செகுத்தோன் திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப் பொடியணிந் தடிமைபூண் டேனே. (10) |
55. அரக்கன்-இராவணன். மறலி-கூற்றுவன், கரி-யானை; கயாசுரன். வேள் - மன்மதன். திணை விராய் எண்ணியவழி மிகுதி பற்றி. ‘இவர்’ என உயர்திணை முடிபு பெற்றது. அன்றி, அனைத்துப் பெயர்களையும் உயர்திணை என்றே கொள்ளினும் அமையும். மிகை-செருக்கு. இந்திரனைத் தோள நெரித்ததும், கருடனை இடப தேவரால் அலைப்பித்ததும், பிறவும் ஆகிய வரலாறுகளைப் புராணங்களிற் கண்டுகொள்க. இதன் ஈற்றடியில் உள்ள தொடர் ஆறாம் திருப்பாட்டின் ஈற்றடியிலும் வந்திருத்தல் காண்க. |
|