பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்

85.

நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு
   நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும்
   விரிசடை யடிகள்தங் கோயில்

அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத்
   தகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (6)
 

85.     அகம், அந்நெஞ்சின் அகம். ‘நிலைமையோடு கூடி’   என
ஒருசொல்   வருவிக்க.   முதற்றொட்டு,   ‘‘எழுந்த’’  என்பது  காறும்
உள்ளவை,     வெஞ்சுடருக்கு       அடையாய்,       இல்பொருள்

உவமையாக்கின.     வெஞ்சுடர்-பகலவனது வெப்பமான     கதிர்கள்.
சுடர்வபோன்று-வீசுவனபோன்று.  துளும்பும்-விரிகின்ற.   புரிசை-மதில்.
‘‘புரிசையும்,   அகழியும்   சூழ்ந்த   வட்டத்து   அகம்படி’    என்க.
அகம்படி-உள்ளிடத்தில்.  மணி நிரை பரந்த செஞ்சுடர்- மாணிக்கங்கள்
பரந்து     கிடத்தலால்     உண்டாகின்ற     செம்மையான    ஒளி.
அரும்பும்-தோன்றுகின்ற.


மேல்