பாட்டு முதற்குறிப்பு அகராதி

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

25. கோயில்

255.

நேசமு டையவர்கள் நெஞ்சு
   ளேயிடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்
   ணுதலைக் காமருசீர்த்
தேச மிகுபுகழோர் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தீசனை எவ்வுயிர்க்கும் எம்
   இறைவன்என் றேத்துவனே.                    (9)
 


255.     காய் சினம், இன அடை.   மால்  விடை-பெரிய இடபம்.
‘திருமாலாகிய   இடபம்’   எனலும்   ஆம்.  காமரு-விரும்பத்  தக்க.
சீர்-அழகு.  ‘சீர்த்  தில்லை’  என  இயையும்.  தேசம் மிகு புகழ்-நில
முழுதும் பரவிய புகழ். ‘‘புகழோர்’’ என்றது, தில்லைவாழ்  அந்தணரை.
‘எவ்வுயிர்க்கும் இறைவன்   என்று   ஏத்துவன்’   என்றது,  ‘அவனது
பெருமை   யறிந்து   காதலித்தேன்’  என்றவாறு.  ‘இனி   அவனைத்
தலைப்படுதல் என்றோ’ என்பது குறிப்பெச்சம். இறைவன்-தலைவன்.


மேல்