பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

14. திருப்பூவணம்

151.

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
   புனிதனை, வனிதை பாகனை, வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
   குழகனை, அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
   திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
   பரமன துருவமா குவரே.                      (10)

திருச்சிற்றம்பலம்
 


151.  ‘‘வெண்டலை’’ என்றது, பிரம கபாலத்தை இது சிவபிரானுக்குப்
பிச்சைப்    பாத்திரமாவது.  குழகன்-இளையோன், தாருகாவன முனிவர்
பன்னியர்பால்      பிச்சைக்குச்    சென்ற    பொழுது    சிவபிரான்
இளைஞனாய்ச்   சென்றமை  அறிக.  ‘‘தெரியும்’’ என்பது, ‘‘கருவூரன்’’
என்றதன்  இறுதி  நிலையோடு முடியும். ‘பாவாகிய வண்ணத் தமிழ்கள்’
என்க.    வண்ணம்-அழகு.     ‘‘பத்தும்’’   என்றதனால்   இதன்கண்
இருதிருப்பாடல்கள் கிடையாவாயின என்க.


மேல்