3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
151. | பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட புனிதனை, வனிதை பாகனை, வெண் கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும் குழகனை, அழகெலாம் நிறைந்த தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந் திகழ்கரு வூரனேன் உரைத்த பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள் பரமன துருவமா குவரே. (10)திருச்சிற்றம்பலம் |
151. ‘‘வெண்டலை’’ என்றது, பிரம கபாலத்தை இது சிவபிரானுக்குப் பிச்சைப் பாத்திரமாவது. குழகன்-இளையோன், தாருகாவன முனிவர் பன்னியர்பால் பிச்சைக்குச் சென்ற பொழுது சிவபிரான் இளைஞனாய்ச் சென்றமை அறிக. ‘‘தெரியும்’’ என்பது, ‘‘கருவூரன்’’ என்றதன் இறுதி நிலையோடு முடியும். ‘பாவாகிய வண்ணத் தமிழ்கள்’ என்க. வண்ணம்-அழகு. ‘‘பத்தும்’’ என்றதனால் இதன்கண் இருதிருப்பாடல்கள் கிடையாவாயின என்க. |
|