86. ‘தீத்திரளின் உருவம்போல’ என உவம உருபு விரிக்க. புந்தியில் - எமது மனத்தில், ‘‘மால்விடையோன்’’ என்றது ஒரு பெயராய், ‘‘வந்த’’ என்றதற்கு முடிபாயிற்று. தூத்திரட் பளிங்கில் தோன்றிய தோற்றம் தூய பளிங்கின் திரளினின்றும் தோன்றிய காட்சி. தோன்ற-காணப்படுமாறு. நா-நாவினால். ‘சிவபெருமானது திருமேனி பளிங்குபோல்வது, திருநீற்றினால்’ என்பது முன்னும் கூறப்பட்டது. ‘நாஓர்ந்து’ என, ஓர்தல், இங்கு, ‘ஓதி’ என்னும் பொருட்டாய் நின்றது. |