169. ‘பழையோர் பலர் பன்னெடுங்காலம் பணிசெய்து ஏம்பலித்திருக்க’ எனக் கூட்டுக. ஏம்பலித்திருக்க - வருந்தி யிருக்க. ‘கோயிலாக’ என, ஆக்கம் வருவிக்க. ‘‘நெஞ்சு’’ என்றதனை, ‘‘என்’’ என்றதனோடு கூட்டுக. மறக்கேன்-மறவேன் ; இவ்வாறு முன்னும் வந்தது. ‘‘நெடும்புருவத்து’’ என்பதனை முன்னே கூட்டி, ‘மின்னும் இளமயிலும் அனையார்’ என உரைக்க. விலங்கல்- மலை, செய், உவம உருபு. ‘நாடக சாலைக்கண்’ என உருபு விரிக்க. |