226. படர்தல்-மூடுதல், ‘வரையில்’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பவளமலை சிவபெருமானுக்கும், அதனை மூடிய பனி அப்பெருமான் பூசியுள்ள திருநீற்றுக்கும் உவமை. கண்ணி-முடியில் அணியும் மாலை. ‘‘கொன்றை’’ என்றதும் அதனாலாகிய கண்ணியையே. துன்று-பொருந்திய. பொன்-பொன்போலும், குழல்-சுருண்ட, திவள-விளங்க, ‘திருநீறும், சடையும் திவள நடம்புரிகின்ற’ என்க. தவளவண்ணன்-வெண்மை நிறத்தை உடையவன். |