68. ‘‘தேனுமாய்’’ என்ற ஆக்கம், உவமை குறித்து நின்றது. ‘‘உள்ளே’’ என்றதன்பின், ‘நின்று’ என ஒரு சொல் வருவிக்க. ‘என் ஆருயிர்க்குப் போகமாம் புரன்’ என்க. போகம் - சிவபோகம்; அதனையுடைய புரம் சிவலோகம். காலன், காமன், புரம் இவர்கட்கு அந்தகன் என்க. அந்தகன் - முடிவைச் செய்பவன். ஆலும் அதற்கே முதலும் - விளையாடுகின்ற அதற்கே முந்துவாள். போலும், ஆம் அசைநிலைகள், பொய்யாதது-மெய்யாகக் கூறிய சொல், ‘‘பொய்யாதது’’ என்ற சொல் முதல் திருப்பாட்டிற் சென்று மண்டலித்தல் காண்க. |