94. பழையராந் தொண்டர்-நெடுங்காலமாகத் தொண்டு செய்துவருபவர். மிண்டர்-வன்கண்மை யுடையவர். ‘‘பிணி’’ என்றது வினையை, ‘எனது குற்றமான செயலைப் பொருட்படுத்தாது நீக்குதலும், அவ்வாற்றால் எனக்கு வினை உண்டாகாமல் தடுத்தலும் செய்யாதவர்’ என்றபடி. இதனால், இவ்வாசிரியர் தமது வினையால் தமக்கு உண்டாகிய துன்பத்தை உணர்ந்திருந்தமை பெறப்பட்டது. குழகர்-இளையவர். கங்கை அழகர்-கங்கையை அணிந்த அழகர். |