95. ‘முடியும், வாயும், மேனியும் செந்நிற முடையன ; திருமேனிமேற் பூச்சும், முப்புரி நூலும், புன்னகையும் வெண்ணிறமுடையன’ என்றவாறு. தவளம்-வெண்மை. களபம்-பூசும் சாந்து ; சிவபெருமான் பூசிக்கொள்ளும் சாந்து திருநீறே. துவளும்-நெளியும். ‘‘கலை’’ எனப் பொதுப்படக் கூறியது ‘தோலாடை’ என்றற்கு. துகில்-நல்லாடை. ‘‘ஒருபால்’ என்றாராயினும், ‘ஓரொருபால்’ என்பது கருத்தென்க. ஒருத்தி-ஒப்பற்றவள். இடமருங்கில் துடிபோலும் இடையை உடைய ஒப்பற்றவளாகிய அவளும் இருப்பாள்’ என உரைக்க. |