| 
 125.      இத் திருப்பாட்டில்,நகாரங்கட்கெல்லாம்,ஞகாரங்கள் போலியாய்வந்தன.இவ்வாறு வருதலை, ‘‘செய்ஞ்ஞின்ற நீலம்’(திருமுறை-4-80.5.)
 என்னும்       அப்பர்  திருமொழியிற்  காண்க.  மை      நின்ற-கருமை நிறம்
 பொருந்திய   ;  இனி  ‘மேகம்       நின்றது  போன்ற’  என்றும்  ஆம்.
 ‘திரைலோக்கிய       சுந்தரன்,  தனக்குத்  தன்  உயிர்போன்ற      மனத்தைக்
 கொடுத்தவட்கு,  அவளது  வளையையும்       திரும்பத்  தருகின்றிலன் ;
 இதுபோலும்       நன்றியில்லாத  செயலை  இதற்குமுன்  யார்      செய்தார் ;
 ஒருவரும்   செய்திலர்.  அதனால்,       இவன்  மெய்ம்மை  பொருந்திய
 அன்பராயினார்க்குத்          தானும்     மெய்ம்மையான     அருளில்
 பொருந்தவேண்டிய       நன்றியறியும்  பண்பு  இல்லாதவன் ஆகின்றான்’
 எனப்       பழித்தவாறு,  காதல்  மிகுதியாற்  கூறினமையின்,      இப் பழிப்பு
 அமைவதாயிற்று.            இந்             நின்ற-இங்கு              நிற்கின்ற.
 கோவணவன்-கோவணமாக      உடுத்த உடையை யுடையவன்.
 |