10. மடங்கல்- சிங்கம்; நரசிங்கம். கனகன்-‘இரணிய கசிபு’ என்னும் அசுரன். இவ்வடி, சரப வரலாற்றைக் குறித்தல் கூடும். மருளார்-மருட்சியுடையவரது. திரிபுரத்தசுரர் புத்தன் போதனையால் மயங்கிச் சிவநெறியைக் கைவிட்டவராதல் அறிக. வைதிகத் தேர்-வேதத்தைக் குதிரையாகக் கொண்ட தேர். ஏறு சேவகன்- மிக்க வீரத்தை யுடையவன். அரக்கன்-இராவணன். அரட்டு - செருக்கு. இரு வரை-பெரிய மலை, ‘அருட்டிரு வரைக்கீழ்‘ எனவும் பாடம் ஓதுவர். விடங்கன்-அழகன். |