2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
48. | மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த மருந்தை, என் மாறிலா மணியைப், பண்டலர் அயன்மாற் கரிதுமாய், அடியார்க் கெளியதோர் பவளமால் வரையை, விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ் திருவீழி மிழலையூர் ஆளும் கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக் குறுகவல் வினைகுறு காவே. (3) |
48. மண்டலம்-ஞாயிற்றின் வட்டம், அதன் ஒளியை விலக்கி நுகர்தலாவது, ஞாயிற்றின் ஒளியிலே மயங்கி அதனையே | வணங்கியொழியாது. அதன் நடுவில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தியை வணங்கி மகிழ்தல். மருந்து-அமுதம். மாறு- கேடு. அலர் அயன்- மலரின்கண் உள்ள பிரமன். ‘அயன்மாற்கு அரியதும், அடியார்க்கு எளியதும் ஆயதோர் பவளமால் வரை’ என்றது இல்பொருளுவமை. ‘‘அரிது மாய்’’ என்ற உம்மை, எச்சம், மலர்வாய்-மலரின்கண் பொருந்திய. வேரி-தேன். வார்- ஒழுகுகின்ற. குரு மணி-ஆசிரியருள் தலைவன். |
|