59. மாதி - மாது உடையவள், தலைவி. மாது - அழகு. “மாதி” என்றது “அறிகிலள்” என்பதனோடு இயையும். மெய்ச் சுருதி - உண்மை நூலாகிய வேதம். அதன் விதிவழியோர், அந்தணர். புராணன் - பழையோன்; என்றது, ‘முற்பட்டவன்’ எனப் பொருள்தந்து. அமரர்களையும் தோற்றுவித்தோனாதல் குறித்தது “நீதி” என்றது பெருமையை; ‘அதனை அறியாதவளாய் அவன் திண் .தோள்களைப் புல்ல நினைத்தாள்: இது கூடுவதோ’ என்றபடி. இக்கூற்றால், இவ்வாசிரியர்க்கு இறைவன் திருவருட்கண் உள்ள வேட்கை மிகுதி புலனாகும். “அறிகிலள்” என்றது முற்றெச்சம். |