44. ‘வீசும் வாசல்’ என இயையும். வாசல், ‘வாயில்’ என்பதன் மரூஉ. தெண்ணர், ‘திண்ணர்’ என்பதன் மரூஉ’ ‘மூர்க்கர்’ எனப் பொருள் தந்தது. ‘‘தெண்ணர் கற்பழிக் கத்திரு உள்ளமே’’ (திருமுறை-3, 47, 3) என வந்தமை காண்க. ‘உள்ளத்து இருளர்’ என்க. ‘திட்டை, முட்டை’ என்பன: பகுப்பற்ற பிண்டத்தை உணர்த்தி நின்றன. ‘‘பெண்ணர்’’ என்பதற்கு, ‘‘பேடர்’’ என்றதற்கு உரைத்தது உரைக்க. |